» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலம் செண்பகாதேவி அம்மனுக்கு தீர்த்தவாரி : திரளான பக்தர்கள் தரிசனம்

வியாழன் 25, ஏப்ரல் 2024 8:32:07 PM (IST)



குற்றாலம் அருவியில் செண்பகாதேவி அம்மனுக்கு தீர்த்தவாரி மற்றும் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மேல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செண்பகாதேவி அம்மன் திருக்கோவில் சித்திரை பௌர்ணமி திருவிழா கடந்த 14ஆம் தேதி  துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 

திருவிழா நிறைவு நாளான நேற்று  ஸ்ரீ செண்பகாதேவி  அம்மனுக்கு செண்பகாதேவி அருவியில் தீர்த்தவாரி மற்றும் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.  இந்நிகழ்வின் போது செண்பகாதேவி அருவியில்  மஞ்சள் பொடிகள் கொட்டப்பட்டு அருவி மற்றும் தடாகம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் மாறியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory