» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செந்தில் பாலாஜியின் காவல் 35-வது முறையாக நீட்டிப்பு : நீதிமன்றம் உத்தரவு!!
வியாழன் 25, ஏப்ரல் 2024 4:45:12 PM (IST)
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.
தொடர்ந்து ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும் நீதிமன்ற காவல் முடியும் ஏப்ரல் 25-ம் தேதி காணொளியில் ஆஜராகும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது