» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து: 2 மருத்துவக் கல்லூரி மாணவிகள் உட்பட 3பேர் பலி!
சனி 4, டிசம்பர் 2021 12:12:16 PM (IST)
நெல்லையில் ஸ்கூட்டர் மீது கார் மோதியதில், மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மற்றொரு மாணவி படுகாயம் அடைந்தார்.
நெல்லை- மதுரை நான்கு வழிச்சாலையில், ரெட்டியார்பட்டி அருகே நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் டயர் வெடித்து எதிரில் வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் வந்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி 4ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் காயத்ரி, பிரிட்டோ ஏஞ்சல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொரு மாணவி படுகாயம் அடைந்தார். காரை ஓட்டி வந்த சண்முகசுந்தரம் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ் குமார் உட்பட காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.