» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கு: சிறுவன் உள்பட 4 பேர் கைது

திங்கள் 22, நவம்பர் 2021 10:14:38 AM (IST)

ஆடு திருடர்களால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களை இரு சக்கர வாகனத்தில் விரட்டி வந்தபோது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் நேற்று அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகளில் பூமிநாதனுக்கு அருகே இருந்த செல்போன்கள் பற்றிய விவரங்களை செல்போன் சிக்னல் வழி போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதில் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகேயுள்ள தோகூர் பகுதியைச் சேர்ந்த சிலரின் எண்களை தனிப்படையினர் நேரில் விசாரணை நடத்தினர். இதன்படி 10 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் இன்று அதிகாலை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களின் இரு சக்கர வாகனங்களும் கொலை செய்யப் பயன்படுத்திய கத்திகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டோர் தற்போது திருச்சியில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று பிற்பகலில் கீரனூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory