» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி கடற்கரை கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 30, ஜூலை 2025 8:23:14 PM (IST)
கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களை பாதுகாக்க உடனடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தினார்.
அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பினால் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு தடுப்பு சுவர், தூண்டில் வளைவுகள், மற்றும் பாதிப்படைந்த கடற்கரையோர சாலைகளை செப்பனிட மத்திய அரசு நிதியினை ஒதுக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் பேசினார் .
நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அவர் பேசியதாவது : குமரி மாவட்டத்தின் 72 கி,மீ தூரம் உள்ள கடற்கரையில் 42 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் கடலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பி உள்ளனர். அடிக்கடி நிகழும் கடலரிப்பு காரணமாக இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் கடற்கரை சாலைகள் கடலரிப்பினால் மிகவும் சேதமடைந்து மக்கள் பயணம் செய்ய இயலாத நிலையில் உள்ளது.
கடற்கரை கிராமங்களை காப்பதற்கு தடுப்பு சுவர்கள் கட்டவும், தூண்டில் வளைவுகள் அமைக்கவும், சாலைகளை செப்பனிடவும் மத்திய அரசு உடனடியாக போதிய நிதியினை ஒதுக்க வேண்டும். மேலும் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு போதிய இழப்பினை வழங்கவும் அரசு முன்வர வேண்டும். கடலரிப்பினை தடுக்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுப்பதுடன், மாறி வரும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தொலைநோக்கு பார்வையுடன் மீனவர்களுக்கு போதிய வளர்ச்சி திட்டங்களை அரசு கட்டமைக்க வேண்டும் என்று பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை செலுத்தினார்!
வியாழன் 31, ஜூலை 2025 12:41:20 PM (IST)

தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் மதிக்கதக்கது: நல வாரிய தலைவர் பெருமிதம்
புதன் 30, ஜூலை 2025 4:08:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை
புதன் 30, ஜூலை 2025 4:01:09 PM (IST)

நாகர்கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் முறிந்து விழுந்தது!
புதன் 30, ஜூலை 2025 11:13:01 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.2.79 கோடி மதிப்பில் சாலை மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்!
செவ்வாய் 29, ஜூலை 2025 5:36:45 PM (IST)

குமரியில் ரூ.85.36 கோடி மதிப்பில் சாலை பணிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
செவ்வாய் 29, ஜூலை 2025 4:04:13 PM (IST)
