» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காவலர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு? : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

செவ்வாய் 29, ஜூலை 2025 3:58:54 PM (IST)

கன்னியாகுமரி அருகே காவலர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் (80), இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு நான்கு காவலர்கள் ஆதிகிலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் பேரனை காவலர்கள் இழுத்து வரும் போது சூசைமரியாள் எனது பேரனை விடுங்கள் எதற்காக இழுத்து செல்கிறீர்கள் என்று கேட்ட போது வயதான மூதாட்டி என்றும் பாராமல் 4 காவலர்களும் அவரை பிடித்து கீழே தள்ளி போட்டு தரையில் இழுத்து காலால் உதைத்துள்ளனர். 

இதனால் சூசைமரியாள் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவரது மருமகள் சந்திரகலா 108 ஆம்புலன்ஸை அழைத்து குளச்சல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் மூதட்டி சூசைமரியாள் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஆகவே மூதாட்டியை கொடுரமான முறையில் தாக்கி கொலை செய்த நான்கு காவலர்களையும் கைது செய்து குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory