» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வைகாசி விசாகத் திருவிழா: நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை துவக்கம்!

வெள்ளி 6, ஜூன் 2025 3:17:05 PM (IST)



வைகாசி  விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். 

நாகர்கோவில் ஆசாரிமார் வடக்கு தெரு இசக்கிமுத்து சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி வைகாசி விசாகம் மற்றும் மாசி மகம் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவின் 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை நிகழ்ச்சி நாகர்கோவிலில்  நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் நாகர்கோவில் முதல் திருச்செந்தூர் வரை பாதயாத்திரையாக செல்கின்றனர். 

இந்த பாதயாத்திரை  8ம்தேதி திருச்செந்தூர் சென்றடைகிறது. பின்பு திருச்செந்தூர் கடலில் புனித நீராடி காவடி கட்டி எடுத்துச் செல்லப்பட்ட விபூதி பன்னீர் தேன் போன்ற பொருட்களை செந்தில் ஆண்டவருக்கு செலுத்தி வழிபடுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory