» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!

வெள்ளி 6, ஜூன் 2025 8:53:22 AM (IST)



கேரளாவில் இருந்து குமரிக்கு மீன் கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக இறைச்சி, மீன் கழிவுகளை ஏற்றியபடி வாகனங்கள் செல்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த பிரச்சினை நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்தநிலையில் நேற்று கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் கழிவுகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் குழித்துறை பகுதியில் வைத்து சிறைபிடித்தனர். பின்னர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து அந்த கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் டிரைவர், கிளீனரை பிடித்து விசாரித்தனர். அதே சமயத்தில், தூத்துக்குடி பகுதிக்கு கொண்டு செல்லும் மீன்கள் இருப்பதாக டிரைவர் கூறியுள்ளார். அது உண்மையா? என அதற்குரிய ஆவணத்தை கேட்டுள்ளனர். இதனை டிரைவர் முறையாக ஒப்படைக்கவில்லையென்றால், மீன்கழிவுகளை கேரளாவுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory