» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்
புதன் 9, அக்டோபர் 2024 12:14:52 PM (IST)
திருவட்டார் அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள செறுகோல் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜார்ஜ் ஹென்றி என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். பெற்றோரும் அந்த பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து, வேறு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியும் பள்ளிக்கு வந்தார். இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றி பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி நடவடிக்கை எடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் மோசடி?அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை
சனி 25, ஏப்ரல் 2026 4:04:55 PM (IST)

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)

அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)

தமிழகத்திலேயே கடைசி இடம்: வாக்குப்பதிவில் பின் தங்கிய குமரி மாவட்டம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)


