» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 149-வது பிறந்த நாள் விழா : ஆட்சியர் மரியாதை!
சனி 27, ஜூலை 2024 3:23:37 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 149-வது பிறந்த நாளையொட்டி அன்னாரது சிலைக்கு குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 149-வது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது முழு திருவுருவ சிலைக்கு இன்று (27.07.2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் சிவதாணுப்பிள்ளை – ஆதிலெட்சுமி இணையருக்கு 1876 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள் மகனாக பிறந்தார் கவிமணி தேசிய விநாயம் பிள்ளை.
கவிமணி சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். கவிமணி மலரும் மாலை, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்கள். நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். ஆங்கில மொழியில் எட்வின் ஆர்னால்டு எழுதிய ”லைட் ஆ/ப் ஆசியா” என்ற நூலை தமிழில் ”ஆசிய ஜோதி” என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தார்.
குழந்தைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் அத்தகைய குழந்தைகளுக்காக ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கு துள்ளிக் குதிக்குது கன்றுகுட்டி” என்று ரசித்து இசைக்கும் படியான பாடலை இயற்றியவர். மேலும் பெண்கள் ஒரு போதும் யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது, பெண்ணடிமைத்தன்மையை முற்றிலும் ஒழிய வேண்டும் என்று ”மங்கையாராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்று பெண்மையை பார் போற்ற செய்தவர் கவிமணி ஆவார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அவ்கள் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் மூர்த்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வ லெட் சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷியா, சுசீந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)


