» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 7பேர் கைது: படகு பறிமுதல்!
சனி 18, மே 2024 4:35:07 PM (IST)
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேரை, தூத்துக்குடி கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான 'வைபவ்' ரோந்து கப்பல், துாத்துக்குடியிலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இலங்கை நாட்டில் பதிவு எண் கொண்ட மீன்பிடி படகு ஒன்று 7 மீனவர்களுடன் இந்திய கடல் எல்லைக்குள் கன்னியாகுமரி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து கடலோர காவல் படை வீரர்கள் அந்த விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படகு மற்றும் 7மீனவர்களையும் நாளை(மே 19) காலை 9 மணிக்கு தருவைக்குளம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 30, ஏப்ரல் 2025 12:49:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் தமிழ்வார விழா: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:10:36 PM (IST)

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 3:22:17 PM (IST)

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு!
திங்கள் 28, ஏப்ரல் 2025 5:01:42 PM (IST)

நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:49:22 PM (IST)

Gnana Muthuமே 19, 2024 - 10:55:00 PM | Posted IP 162.1*****