» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 7பேர் கைது: படகு பறிமுதல்!
சனி 18, மே 2024 4:35:07 PM (IST)
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேரை, தூத்துக்குடி கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான 'வைபவ்' ரோந்து கப்பல், துாத்துக்குடியிலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இலங்கை நாட்டில் பதிவு எண் கொண்ட மீன்பிடி படகு ஒன்று 7 மீனவர்களுடன் இந்திய கடல் எல்லைக்குள் கன்னியாகுமரி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து கடலோர காவல் படை வீரர்கள் அந்த விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படகு மற்றும் 7மீனவர்களையும் நாளை(மே 19) காலை 9 மணிக்கு தருவைக்குளம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

கன்னியாகுமரி கடல் அலையின் சீற்றத்தால் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:09:27 AM (IST)

நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 4:58:02 PM (IST)

Gnana Muthuமே 19, 2024 - 10:55:00 PM | Posted IP 162.1*****