» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 7பேர் கைது: படகு பறிமுதல்!
சனி 18, மே 2024 4:35:07 PM (IST)
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேரை, தூத்துக்குடி கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான 'வைபவ்' ரோந்து கப்பல், துாத்துக்குடியிலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இலங்கை நாட்டில் பதிவு எண் கொண்ட மீன்பிடி படகு ஒன்று 7 மீனவர்களுடன் இந்திய கடல் எல்லைக்குள் கன்னியாகுமரி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து கடலோர காவல் படை வீரர்கள் அந்த விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படகு மற்றும் 7மீனவர்களையும் நாளை(மே 19) காலை 9 மணிக்கு தருவைக்குளம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)

நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 16, மே 2026 4:27:27 PM (IST)

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)



Gnana Muthuமே 19, 2024 - 10:55:00 PM | Posted IP 162.1*****