» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 6 பேருக்குப் புதிய வாழ்வு கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மகேஷ் (23). இவர் சில மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தவர். கடந்த 16-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, காவல்கிணறு ரயில்வே மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயமடைந்தார்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். "மண்ணோடு மண்ணாக விரும்புவில்லை, அவர் உறுப்புகள் மூலம் பிறர் வாழட்டும்" என்ற குடும்பத்தினரின் சம்மதத்துடன் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள் மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. இவை திருச்சி, காரைக்குடி, மதுரை மற்றும் நாகர்கோவில் மருத்துவமனைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர சோதனை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:25:12 PM (IST)

குமரி மாவட்டக் கல்லூரிகளில் ரூ.11 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:43:44 AM (IST)

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

