» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!

புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

குலசேகரம் அருகே மருத்துவ மேல்படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி, ரப்பர் விவசாயியிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம்  குலசேகரம் அருகே உள்ள வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த கோபகுமார் (60), ரப்பர் விவசாயி. இவரது மகன் ஆதித்யன் மருத்துவராக உள்ளார். அவர் எம்.டி. (M.D.) மேல்படிப்பு படிப்பதற்காகக் கோபகுமார் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

நெல்லை மகாராஜா நகரைச் சேர்ந்த சீனிவாசன், அவரது மனைவி மற்றும் கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன இயக்குனர் யமுனா தேவி ஆகியோர் கோபகுமாரைத் தொடர்பு கொண்டனர். சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

இதனை நம்பிய கோபகுமார் சீனிவாசனிடம் ரூ.8 லட்சமும், யமுனா தேவியிடம் ரூ.10 லட்சமும், என மொத்தம் ரூ.18 லட்சத்தை வழங்கியுள்ளார். பணம் கொடுத்தும் மருத்துவ மேல்படிப்புக்கு இடம் வாங்கித் தரவில்லை. மேலும், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோதும் அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோபகுமார் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் விசாரணை நடத்தி, சீனிவாசன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory