» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் தடகளப் போட்டி: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
வியாழன் 7, செப்டம்பர் 2023 8:03:36 PM (IST)
தூத்துக்குடியில் குறுவட்ட அளவிலான மாணவ - மாணவியருக்கான தடகளப் போட்டியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைத்த தூத்துக்குடி புறநகர் குறுவட்ட அளவிலான மாணவ - மாணவியருக்கான தடகளப் போட்டியை தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று துவக்கிவைத்து சான்றிதழ்கள் வழங்கினார்.
விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப், தலைமை ஆசிரியை சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.