» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வெளிநாடுகளில் ரன் குவிப்பு: சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி!
வெள்ளி 21, ஜனவரி 2022 12:14:28 PM (IST)
வெளிநாடுகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து புதிய சாதனை ஒன்றை படைத்தார். இந்தியாவிற்கு வெளியே ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
சச்சின் 5065 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்த நிலையில் விராட் கோலி 5100 ரன்கள் எடுத்து சச்சினை பின்னுக்கு தள்ளினார். இந்தப் பட்டியலில் தோனி (4520), ராகுல் டிராவிட் (3998), சவுரவ் கங்குலி (3468) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.