» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்ணிடம் 3.5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

புதன் 8, ஜூலை 2026 8:30:01 AM (IST)

கோவில்பட்டியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் 3.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேவியர் மனைவி அனிதா (45). அனிதா கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள காசி அம்மன் கோயில் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள், அனிதா எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3.5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியைத் திடீரெனப் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினர்.

இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory