» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயில் முறைகேடுகளை விசாரிக்க 6 பேர் குழு : அமைச்சர் ரமேஷ் உத்தரவு

சனி 6, ஜூன் 2026 9:10:18 AM (IST)



திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், நடைமுறையில் உள்ள அன்னதான திட்டம் மற்றும் அன்னதானத்திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து பணிகள் மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதி அறை முன்பதிவு ஆகிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திட கீழ்காணும் துறை அலுவலர்களை கொண்ட ஆய்வுக்குழுவினை அமைத்து உத்தரவிடப்படுகிறது.

இந்தக் குழுவில், கோ.ஜெயப்பிரியா, தங்கம், பாஸ்கரன், கார்த்திகேயன், பகவதி, மாயக்கண்ணன் உள்ளிட்ட ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். ஆய்வுக்குழுவிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடவும், தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பார்வைக்குறிப்பு ஆய்வறிக்கையின்படி ஆய்வுக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்படுகிறது. ஆய்வுக்குழுவானது வரும் 20ம் தேதிக்குள் ஆய்வறிக்கையினை சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory