» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரேஷன் கடை பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு: நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை!

திங்கள் 18, மே 2026 4:18:18 PM (IST)

சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து, சீனி, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் பெரியாண் மகன் பாலகிருஷ்ணன் (51). இவர் சாத்தான்குளம் தாலுகா, புதுக்குளம் பகுதியில் உள்ள அரசு நியாயவிலைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக எடையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை என்பதால், வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இன்று காலை 09:30 மணியளவில் மீண்டும் கடையைத் திறப்பதற்காகப் பாலகிருஷ்ணன் வந்துள்ளார். அப்போது, கடையின் முன்பக்கக் கதவின் பூட்டு லேசான முறையில் உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்ளே சென்று கடையில் வைக்கப்பட்டிருந்த இருப்புப் பொருட்களை அவர் ஆய்வு செய்தார்.

அதில், கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடையுள்ள 1 மூட்டை சீனி, 50 கிலோ எடையுள்ள 1 மூட்டை துவரம் பருப்பு, 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 பாக்ஸ் பாமாயில் ஆகிய பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைக்கப்பட்ட பூட்டு மற்றும் கடை வளாகத்தைப் பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டுசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory