» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 27, பிப்ரவரி 2026 8:49:53 PM (IST)
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2018-ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பாலமுருகன் (45/26) என்பவர் தனது மனைவி சாந்தியை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று (27.02.2026) பாலமுருகனை குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், தற்போதைய காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கணேசன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிருக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மற்றும் கடனுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 5:38:53 PM (IST)

பேருந்து நிலையத்துக்கு மபொசி பெயரை மாற்றி கருணாநிதி பெயரா? - சீமான் கண்டனம்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 5:08:54 PM (IST)

நடிகையுடன் தொடர்பு: விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:57:45 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் கீதா ஜீவன் விருப்ப மனு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:34:40 PM (IST)

உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா: முதல்வர் உருக்கம்!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:18:33 PM (IST)

ஓபிஎஸ் சேர்க்கை திமுகவுக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்: தமிழிசை கருத்து!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:32:51 PM (IST)

