» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் கீதா ஜீவன் விருப்ப மனு!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:34:40 PM (IST)


தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அமைச்சர் கீதா ஜீவன் விருப்ப மனு தாக்கல் செய்தார். 

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனத் தலைமைக்கழகம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான பி. கீதா ஜீவன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமைக்கழக அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியின் போது, தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.

விளாத்திகுளம் தொகுதியில் 

அதேபோல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் (சட்டமன்ற சட்ட விதிகளின் ஆய்வுக்குழுத் தலைவர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்) வழங்கினார். இந்த நிகழ்வில் விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory