» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)
திமுக எம்.பி. கனிமொழி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேசிய கல்விக் கொள்கை – 2020 (NEP) எந்த மொழியையும் கட்டாயப்படுத்துவதில்லை என்றும், மாநிலங்களுக்கு அவர்களது மொழி, பண்பாடு, கல்வி தேவைகளைப் பொருத்து முழு சுதந்திரம் அளிக்கும் கொள்கைதான் என்றும் விளக்கினார்.NEP-ன் அடிப்படை நோக்கம்,மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி, திறன் மேம்பாடு,ஆராய்ச்சி மற்றும் புதுமை,உலகளாவிய தரத்திற்கு இணையான கல்விஆகியவற்றை வழங்குவதே தவிர, ஹிந்தி திணிப்பது அல்ல என்று சித்ராங்கதன் தெரிவித்தார்.
மேலும்,"ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியும் கட்டாயம் இல்லை. மூன்று மொழிக் கொள்கை என்பது மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே அமல்படுத்தக்கூடியது. தமிழ்நாடு இதுவரை இரண்டு மொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது என்பதையும், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டே வந்துள்ளது. நிதி வழங்குவதற்கும் மொழிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை”என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மத்திய அரசு கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு, புதிய பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகள்,தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், இ-கல்வித் திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி வழங்கியிருப்பதை நினைவூட்டிய சித்ராங்கதன் "மொழி காரணமாக நிதி மறுக்கப்பட்டதாக ஒரு ஆதாரத்தையாவது கனிமொழி காட்ட முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியின் கல்வித் தோல்விகளை மறைக்கவும், வரவிருக்கும் அரசியல் சூழலை எதிர்கொள்ளவும், தேசிய கல்விக் கொள்கையை தவறாக சித்தரித்து மக்களிடையே பயத்தை ஏற்படுத்துவது திமுகவின் வழக்கமான அரசியல் நாடகமாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
"தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் உண்மையான மரியாதை அளித்து வருவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசே. செம்மொழி அந்தஸ்து முதல் தமிழ் ஆய்வு மையங்கள் வரை பல்வேறு நடவடிக்கைகள் இதற்கு சான்று. உண்மைகளை மறைத்து அரசியல் செய்யும் திமுக தலைவர்கள் மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை”என்று சித்ராங்கதன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:43:51 AM (IST)

தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்ட 9 பேர் கைது..!
சனி 7, பிப்ரவரி 2026 5:23:14 PM (IST)

பதிவாளர் அலுவலகங்கள் ஊழலின் உறைவிடமாகத் திகழ்கின்றன: அன்புமணி குற்றச்சாட்டு
சனி 7, பிப்ரவரி 2026 5:13:47 PM (IST)

