» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொதுமக்களின் வரிப்பணத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமா? சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டனம்
செவ்வாய் 6, ஜனவரி 2026 8:24:19 AM (IST)
தி.மு.க. அரசு 98 சதவீத மக்களுக்கான அரசாக இல்லாமல், 2 சதவீத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான அரசாகவே செயல்படுகிறது என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 797 கோடி கடன் வாங்கி குவித்துள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், அரசியல் லாபத்திற்காக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது, மாநில நிதி மேலாண்மையையும், சமூக பொருளாதார நீதியையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த ஓய்வூதிய திட்டத்துக்கு தேவையான ரூ.13 ஆயிரம் கோடியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். மொத்த மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் இருக்கும் அரசு ஊழியர்களுக்காக தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறது.
தி.மு.க. அரசு 98 சதவீத மக்களுக்கான அரசாக இல்லாமல், 2 சதவீத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான அரசாகவே செயல்படுகிறது. இதை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. உரிய நிதி ஆதாரங்கள் ஏற்படுத்தி அரசு கஜானா வளமான பிறகு இந்த ஓய்வூதியத் திட்டத்தை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி-மைசூர் இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:38:08 PM (IST)

ஜன நாயகன் விவகாரத்தில் பாஜக நெருக்கடி கொடுத்ததா? எச். ராஜா மறுப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:30:29 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் ஐக்கியம்!
வியாழன் 8, ஜனவரி 2026 5:54:09 PM (IST)

தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை : போலீசார் அதிரடி சோதனை!
வியாழன் 8, ஜனவரி 2026 3:43:14 PM (IST)

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:31:19 PM (IST)

நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இடிப்பு: இந்து முன்னணி குற்றச்சாட்டு!
வியாழன் 8, ஜனவரி 2026 12:14:32 PM (IST)

