» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கோட்டை கருங்குளம் நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை தலைமையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கண்காணிப்பு பொறியாளர் (நீர்வளத்துறை) சிவகுமார், முக்கிய பிரமுகர் கிரகம்பெல் முன்னிலையில் இன்று (05.12.2025) தண்ணீர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் நம்பியாறு அணை கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி இன்று நம்பியாறு நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நம்பியாறு நீர்த்தேக்கத்தில் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாயின் கீழ் பாசனம் பெறும் 1744.55 ஏக்கர் நேரடி மற்றும் 40 குளங்களின் மறைமுக பாசனப்பரப்பு நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்காக 05.12.2025 முதல் 31.03.2026 முடிய, நாள் ஓன்றுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் பிசான பருவ சாகுபடிக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.
நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு விடப்படும் நீரினால் கோட்டைக்கருங்குளம், கஸ்தூரிரெங்கபுரம், குமாரபுரம், திசையன்விளை, உறுமன்குளம், முதுமொத்தான்மொழி, கரைசுத்துபுதூர் ஆகிய கிராமங்கள் பயன்பெறும். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு பயிர் விவசாயம் செய்வதற்கு கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லாமல் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு சிறப்பாக பயிர் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் வினியோக பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) சிவகுமார், செயற்பொறியாளர்கள் (சிற்றாறு வடிநிலம்) மணிகண்டராஜன், ஆக்னஸ் ராணி, அருள் பன்னீர்செல்வம், உதவி செயற்பொறியாளர் மூர்த்தி உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல... சர்வே தூண் தான்! - தமிழக அரசு வாதம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:26:29 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

பெண்குரலில் பேசி வாலிபரிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்தவர் கைது!
வெள்ளி 12, டிசம்பர் 2025 3:28:52 PM (IST)

தூத்துக்குடியில் ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:25:21 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:44:35 AM (IST)

வீட்டில் கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு: கணவர் உள்பட 3 பேர் கைது
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:32:06 AM (IST)


.gif)