» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 7பேர் உயிரிழப்பு
செவ்வாய் 1, ஜூலை 2025 11:59:03 AM (IST)
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த கமலேஷ் என்பவருக்குச் சொந்தமான கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் 2 பெண்கள் 3 ஆண்கள் என 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 5 அறைகள் தரைமட்டமாகின. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஆலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலையின் போர்மேன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகங்கை வழக்கில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
செவ்வாய் 1, ஜூலை 2025 7:46:56 PM (IST)

அஜித்குமார் விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
செவ்வாய் 1, ஜூலை 2025 5:03:28 PM (IST)

வெற்றி நிச்சயம் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 1, ஜூலை 2025 4:58:05 PM (IST)

அஜித்குமாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது யார்? டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 1, ஜூலை 2025 4:02:21 PM (IST)

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:43:56 PM (IST)

அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கும் போலீசார் : அதிர்ச்சி வீடியோ வெளியானது!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:23:07 PM (IST)
