» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!!
புதன் 4, ஜூன் 2025 5:11:17 PM (IST)
தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கி உள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கடந்த பல ஆண்டுகளாக கோவில் திருவிழாவின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளைகாட்டி காவல் துறையினர் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள். அதனை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யப்படுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம், ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிரம் கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர் வார வேண்டும். இதனால், கிராமம் செழிப்பாக இருக்கும்” என உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 6, ஜூன் 2025 11:46:44 AM (IST)

ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் சந்திப்பில் பாஜக தொடர்பு இல்லை: நயினார் நாகேந்திரன்
வெள்ளி 6, ஜூன் 2025 11:06:58 AM (IST)

ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
வெள்ளி 6, ஜூன் 2025 10:59:39 AM (IST)

தருமபுரி அருகே விபத்தில் சிக்கிய நடிகர் டாம் சாக்கோ கார்: தந்தை உயிரிழப்பு!
வெள்ளி 6, ஜூன் 2025 10:40:15 AM (IST)

பொது இடங்களில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம் : சிபிஎம் மேல்முறையீட்டுக்கு அனுமதி
வெள்ளி 6, ஜூன் 2025 10:19:35 AM (IST)

ரயிலில் கடத்திய ரூ.35 லட்சம் மெத்தபெட்டமைன் பறிமுதல்: பெண் உள்பட 6 பேர் கைது!
வெள்ளி 6, ஜூன் 2025 8:50:31 AM (IST)
