» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயிலில் கடத்திய ரூ.35 லட்சம் மெத்தபெட்டமைன் பறிமுதல்: பெண் உள்பட 6 பேர் கைது!
வெள்ளி 6, ஜூன் 2025 8:50:31 AM (IST)

மணிப்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் போதைப்பொருள் கடத்தி வந்து விற்ற பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.35 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன், கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தி வந்து விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் நுண்ணறிவு போலீசார், தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. யார்டு அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற பெண் உள்பட 6 ேபரிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரிந்தது. 6 பேரையும் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள், திருவொற்றியூர் காந்தி நகரைச் சேர்ந்த முகமது அலி (25), சேப்பாக்கத்தைச் சேர்ந்த முகமது அசார் (26), ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டையை சேர்ந்த ரியாஸ்கான் (26), தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்த பர்வேஸ் உசேன் (26), தண்டையார்பேட்டையை சேர்ந்த அப்பாஸ் அலி (30), மணிப்பூரை பூர்வீகமாக கொண்டு தற்போது செங்குன்றத்தில் வசித்து வரும் மீனா என்ற அமீனா (46) என்பது தெரிந்தது.
இவர்கள் 6 பேரையும் ஆர்.கே. நகர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான 700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், ஒரு கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள், 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மணிப்பூர் மாநிலம் மோரையைச் சேர்ந்தவரான அமீனா, தனது மகன் அஸ்லம் உதவியோடு மோரையில் இருந்து ெரயில் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வந்துள்ளார். பின்னர் அவற்றை தனது தம்பி மகனான அப்பாஸ் அலி மற்றும் அவரது கூட்டாளிகள் மூலம் தாம்பரம், ராயபுரம், செங்குன்றம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு கடத்திச்சென்று விற்றது தெரியவந்தது.
இவர்கள் 1 கிராம் போதைப்பொருளை ரூ.5 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர். இவர்களிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி யாருடையது? எங்கிருந்து வாங்கினார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். கைதான பெண் உள்பட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோசடி வழக்கில் ஈமு நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை: ரூ.7.89 கோடி அபராதம்!
வெள்ளி 6, ஜூன் 2025 5:41:54 PM (IST)

சாதிய வன்கொடுமை: பெரியப்பா பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் போலீசில் புகார்!
வெள்ளி 6, ஜூன் 2025 4:21:40 PM (IST)

மாநிலங்களவை தேர்தல்: கமல்ஹாசன் மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
வெள்ளி 6, ஜூன் 2025 4:07:01 PM (IST)

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜர்!
வெள்ளி 6, ஜூன் 2025 12:31:29 PM (IST)

நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 6, ஜூன் 2025 12:22:51 PM (IST)

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 6, ஜூன் 2025 11:46:44 AM (IST)
