» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
துாத்துக்குடி மாவட்டத்தில் 10 சிப்காட் தொழிற்பூங்கா : சட்டசபையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்!
வெள்ளி 21, மார்ச் 2025 12:31:38 PM (IST)
துாத்துக்குடியில் 10 சிப்காட் தொழிற்பூங்கா உருவாகும்; நடப்பாண்டில் ரூ.16,000 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை துவங்கும் என்றும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

இங்கு ராக்கெட் மற்றும் அனல் மின் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 11,000 டன் வாழை விளைகிறது. இவற்றை பதப்படுத்தி விற்பனை செய்யும் தொழிற்சாலையை அமைத்து தரவேண்டும்.
இதற்கு பதிலளித்த பேசிய தொழில்துறை அமைச்சர் ராஜா: துாத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை அற்புதமான சாலை, ரயில்வசதி உள்ளது. மிக முக்கியமாக துறைமுகம் வசதியும் உள்ளது. தொழிற்துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. இங்கு 3,800 ஏக்கரில் அமைந்துள்ள நான்கு சிப்காட் தொழிற்பேட்டைகளில் 108 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. புதிய சிப்காப்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ள இடம் பிரதான சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.
சாத்தியூகூறுகள் ஆய்வு செய்யப்பட்டு, சாதகமான சூழல் வரும்பட்சத்தில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்படும். துாத்துக்குடியை பொறுத்தவரை நான்கு சிப்காட் ஏற்கனவே உள்ளது. மூன்று புதிய சிப்காட்டிற்கு 5,000 ஏக்கரில் நிலம் எடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. மேலும் மூன்று சிப்காட் தொழில்பூங்கா அமைக்கும் உத்சேதம் உள்ளது. எனவே, துாத்துக்குடியில் மட்டும் 10 சிப்காட் தொழில்பூங்கா உருவாக்கும் வாய்ப்பு இந்த அரசிற்கு கிடைக்கும்.
துாத்துக்குடியில் 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய நிறுவனம் நடப்பாண்டிற்குள் தொழிற்சாலையை துவங்கும். அதன்வாயிலாக ஏராளமான வேலைவாய்ப்பு உருவாகும். வாழை அதிகம் உற்பத்தியாகும்பட்சத்தில், அங்கு மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கான சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
ManiMar 21, 2025 - 11:48:44 PM | Posted IP 162.1*****
அற்புதமான சாலை ரயில் வசதி ?
தூத்துக்குடிMar 21, 2025 - 02:08:41 PM | Posted IP 172.7*****
டுபாக்கூர் ராஜா
மேலும் தொடரும் செய்திகள்

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)

நடிகர் சங்கம் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு: கார்த்தி, விஷால் பதிலளிக்க உத்தரவு
புதன் 30, ஏப்ரல் 2025 4:30:13 PM (IST)

கடமை, கண்ணியம், சுய ஒழுக்கம் முக்கியம்: த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!
புதன் 30, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
புதன் 30, ஏப்ரல் 2025 11:30:02 AM (IST)

பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்க பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஆட்சியர்!
புதன் 30, ஏப்ரல் 2025 10:50:22 AM (IST)

நெல்லை பல்கலை. உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!
புதன் 30, ஏப்ரல் 2025 10:44:19 AM (IST)

premMar 22, 2025 - 08:45:52 AM | Posted IP 104.2*****