» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாராயம் விற்பதே குற்றம், அதிலும் ஊழல் மிகப்பெரிய குற்றம் : சீமான் பேட்டி
வெள்ளி 21, மார்ச் 2025 12:09:08 PM (IST)
டாஸ்மாக் விவகாரத்தில் விசாரணைக்கு தமிழக அரசு தடை கேட்கிறது என்றால் வேதனையான விஷயம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

கொலை சம்பவங்கள் செல்போன் இருப்பதால் தற்போது வெளியில் வருகிறது. இல்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் வெளியே வர வாய்ப்பு இல்லை. தமிழகம் கொலைக்களமாக மாறி வருகிறது என்பது ஒரு வேதனை அளிக்க கூடிய செயல். கொலைக்கு முன்பு பேசியதை காவல்துறை ஒட்டு கேட்கலாமே, அப்படி செய்திருந்தால் சம்பவம் நடப்பதற்கு முன்பே தடுத்திருக்கலாம், ஏன் அதை செய்யவில்லை?
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று புகார் அளித்த பெண்ணின் வாக்குமூலத்தை வெளியிட்ட காவல்துறை, ஞானசேகரன் வாக்குமூலத்தை ஏன் வெளியிடவில்லை? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். டாஸ்மாக்கில் ரூ.ஆயிரம் கோடி ஊழல் குறித்த நடவடிக்கை எடுப்பவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது. நாங்கள் தான் போராட வேண்டும். மும்மொழிக் கொள்கை, தொகுதி வரையறை குறித்து பேசுகிறார்கள்.
அருந்ததியர், இஸ்லாமியர், வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறீர்கள். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடிய வில்லை. ஆனால் இங்கே இருப்பவர்கள் மத்திய அரசை குற்றம் சாட்டி வரு கின்றனர். விஜய்க்கு எங்களை போன்று வெளி யில் வர நேரமில்லை. நேரம் வரும்போது வெளியே வருவார்.முதலில் என்னை தி.மு.க.வின் பி டீம் என்றார்கள். அண்ணாமலை கருத்துக்கு நான்பதில் சொல்ல வேண்டியதில்லை.
பெரியார் குறித்து, திராவிடம் குறித்த இங்கு பேசினால் எடுபடாது. நான் மட்டுமல்ல, யார் பேசினாலும் எடுபடாது. ஆளுகிற அரசின் லஞ்சம், ஊழலுக்கு ஆதரவாக பேசினால் ஆதரவு கிடைக்கும். எதிர் கருத்து ஏற்றுக்கொள்ளப்படாது. இங்கே ஜனநாயகம் இல்லை, கொடுங்கோன்மை தான் நடக்கிறது. சாராய ஆலை அதிபர்கள் முதல்வராக இருந்தால் சாராய விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல் நடக்கத்தான் செய்யும்.
சாராயம் விற்பதே குற்றம், ஆனால் அதிலும் ஊழல் என்பது அதைவிட குற்றம். அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தமிழக அரசு மனு அளித்தது வேதனை அளிக்கிறது. முதலில் ஒரு லட்சம் கோடி என்றார்கள், பிறகு ஆயிரம் கோடி என்றார்கள், இன்னும் கொஞ்ச நாள் கழித்து ரூ.100 கோடி, அதன் பிறகு எதுவுமே இல்லை என்பார்கள்.
ஆயிரம்கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தடை கேட்கிறது என்றால் வேதனையான விஷயம். 2016-ல் டாஸ்மாக்கை மூடுவோம் என்றவர்கள், 2021-ல் அதைப் பற்றி ஏன் பேச வில்லை. தமிழகத்தில் டாஸ்மாக்கால் அதிக விதவைகள் உருவாகுகிறார்கள் என பேசினார்கள் தற்போது அதைவிட அதிக மாக இளம்விதவைகள் உருவாகியுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி!
வியாழன் 8, மே 2025 11:29:44 AM (IST)
