» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு
திங்கள் 15, ஜூலை 2024 5:41:59 PM (IST)

தூத்துக்குடியில் பலத்த காற்றில் குரூஸ் பர்னாந்து பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குருஸ் பர்னாந்து சிலை அருகே போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகரில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென கீழே சரிந்து விழுந்தது.
இரும்பால் ஆன அதிக எடை கொண்ட இந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் கீழே சாயும் போது வாகன ஓட்டிகள் யாரும் குறுக்கே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கீழே விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)

யார் ?மே 16, 1721 - 12:30:00 PM | Posted IP 172.7*****