» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு
திங்கள் 15, ஜூலை 2024 5:41:59 PM (IST)

தூத்துக்குடியில் பலத்த காற்றில் குரூஸ் பர்னாந்து பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குருஸ் பர்னாந்து சிலை அருகே போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகரில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென கீழே சரிந்து விழுந்தது.
இரும்பால் ஆன அதிக எடை கொண்ட இந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் கீழே சாயும் போது வாகன ஓட்டிகள் யாரும் குறுக்கே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கீழே விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 8:22:34 PM (IST)

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)

பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூ.241 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கியது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:20:17 PM (IST)

ராகுல் அரசியலை விட்டு விலக மற்றுமொரு வாய்ப்பு: பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து குஷ்பு கருத்து!
வெள்ளி 14, நவம்பர் 2025 4:07:32 PM (IST)

மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல்: வழக்கு பதியாதது ஏன்? - அன்புமணி கேள்வி
வெள்ளி 14, நவம்பர் 2025 12:55:44 PM (IST)

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 14, நவம்பர் 2025 11:40:29 AM (IST)


.gif)
யார் ?மே 16, 1721 - 12:30:00 PM | Posted IP 172.7*****