» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாட்ஸ்அப் குழு அமைத்து கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ... பாஜக பிரமுகர் கைது!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 8:08:37 PM (IST)

வாட்ஸ்அப் குழுவில் தூத்துக்குடி பாராளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி குறித்து அவதூறாக ஆடியோ பதிவிட்ட பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் எட்டுவர்ட் ராஜதுரை (47) . முன்னாள் பேருராட்சி கவுன்சிலரான இவர் முன்னாள் பாஜக சிறுபான்மை அணி பிரிவு நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது பாஜகவில் பொறுப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் வாட்ஸ்அப் குழுவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக விமர்ச்சித்ததாக கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில் இன்று அவரது வாட்ஸ்அப் குழுவில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி குறித்து எட்வர்ட்ராஜதுரை, அவதூறாக ஆடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மேல அம்பலச்சேரியைச் சேர்ந்த ஐவர்பாண்டி மகன் தினேஷ் (21) என்பவர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஏட்டு முருகேசன் வழக்கு பதிந்தார். உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் விசாரணை நடத்தி எட்வர்ட் ராஜதுரையை கைது செய்தார். காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் விசாரணை நடத்தி வருகின்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory