» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடும் பனிமூட்டம் : திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட தூத்துக்குடி விமானம்!
வியாழன் 8, டிசம்பர் 2022 8:26:25 AM (IST)
தூத்துக்குடியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது.
தூத்துக்குடியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் காலை 6.20 மணிக்கு 39 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதுபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல விமானம் வராததால் 49 பயணிகள் தூத்துக்குடி விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பின்னா், காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பிறகு, விமான போக்குவரத்து சீரடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
K S RamalingamDec 8, 2022 - 08:19:58 PM | Posted IP 162.1*****