» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் கடத்திய 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
வெள்ளி 1, ஜூலை 2022 11:50:55 AM (IST)
தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் கடத்தல் வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 04.06.2022 அன்று ஜார்ஜ் ரோடு இந்திரா நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா எண்ணெய் வைத்திருந்த வழக்கில் ஜார்ஜ் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மோகன் மகன் ஆனந்தகுமார் (32), ராஜேந்திரன் மகன் சார்லஸ் (32) மற்றும் மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் படையப்பா (எ) அருண்குமார் (28) ஆகிய 3 பேரையும் தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் கைதான மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணையினை தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் இராஜாராம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார். இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 31 பேர் உட்பட 127 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஆட்சி கட்டுப்பாட்டில் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது: கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
வியாழன் 3, ஜூலை 2025 7:46:42 PM (IST)

ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் : அஜித்குமார் வழக்கில் நேரடி சாட்சி கோரிக்கை!
வியாழன் 3, ஜூலை 2025 5:43:28 PM (IST)

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா சிறப்பு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் தகவல்!!
வியாழன் 3, ஜூலை 2025 4:28:31 PM (IST)

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்!
வியாழன் 3, ஜூலை 2025 8:55:59 AM (IST)

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)
