» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
செவ்வாய் 25, ஜனவரி 2022 11:53:53 AM (IST)
எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டடர் செய்தியில் கூறியிருப்பதாவது: ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
புரட்சித் தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும், இத்தகைய விஷமச் செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை கல்குவாரி விபத்து: கனிம வளத்துறை அதிகாரி சஸ்பெண்டு!
வியாழன் 19, மே 2022 4:22:50 PM (IST)

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வியாழன் 19, மே 2022 12:40:21 PM (IST)

பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளை: தட்டிக் கேட்ட மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி கைது!
வியாழன் 19, மே 2022 11:23:36 AM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் திடீர் சந்திப்பு : அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக பாராட்டு
வியாழன் 19, மே 2022 11:14:22 AM (IST)

சிதம்பரம் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 19, மே 2022 10:53:49 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)
