» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
செவ்வாய் 25, ஜனவரி 2022 11:53:53 AM (IST)
எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டடர் செய்தியில் கூறியிருப்பதாவது: ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
புரட்சித் தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும், இத்தகைய விஷமச் செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும் சி.பி.ஐ. வழக்கு தொடரும் : நெல்லையில் சீமான் பேட்டி!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:10:51 PM (IST)

திமுக இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:51:39 PM (IST)

பாதுகாப்பில் குறைபாடு இல்லை, மக்கள் தான் எனக்கு பாதுகாப்பு : சி.பி.ராதாகிருஷ்ணன்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:45:52 PM (IST)

திமுகவை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி: தவெக தலைவர் விஜய் அறிக்கை!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:57:51 PM (IST)

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகியாக நீதிபதி ஜோதிமணி தொடரலாம்: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:54:05 PM (IST)

தாய்லாந்தில் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் அழகி போட்டி: முதுகுளத்துார் பெண் தேர்வு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:35:25 PM (IST)


.gif)