» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வங்கி லாக்கர்களில் சோதனை : லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

வெள்ளி 23, ஜூலை 2021 12:44:30 PM (IST)

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள் என 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

இந்நிலையில் எம்.ஆர் விஜயபாஸ்கரின் வங்கி லாக்கர்களை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அவர் பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் எத்தனை லாக்கர்கள் உள்ளது என்பதை கண்டறிந்து சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு சம்மன் அனுப்பி, நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory