» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 29, ஏப்ரல் 2026 5:40:23 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மே 4-ம் தேதி (04.05.2026) கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, பொதுமக்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை குறித்த புகார்கள் அல்லது சந்தேகங்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை வருகிற மே 1-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 16, மே 2026 4:27:27 PM (IST)

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)

திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 5:32:10 PM (IST)

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)


