» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை மோசடி: 3 பேர் கைது
சனி 9, ஆகஸ்ட் 2025 11:49:11 AM (IST)
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் 5வது குருக்குவீதி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வகுமார் (50), திண்டிவனம், சஞ்சிவி ராயன்பேட்டை பகுதியை சேர்ந்த மக்தூம் இப்ராகிம் மகன் முகமது இஸ்மாயில்(51) மற்றும் திண்டிவனம், ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாபு(42) ஆகியோர் பணி ஆணை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் திண்டிவனம் சென்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போலி அரசு பணி ஆணைகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய போலி அரசு முத்திரைகள், கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதன் 13, ஆகஸ்ட் 2025 12:31:22 PM (IST)

குளத்தில் குளிக்க சென்ற பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு: மர்ம ஆசாமிகள் கைவரிசை
புதன் 13, ஆகஸ்ட் 2025 8:27:55 AM (IST)

குமரி மாவட்டத்தில் குடும்ப அட்டைத்தாரருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி துவக்கம்!
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 4:51:26 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 285 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 4:42:45 PM (IST)

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவியிலும் குளித்து குதூகலம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:48:22 AM (IST)

அனைத்து தரப்பு மக்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் பயன்: அமைச்சர் பெருமிதம்!!
சனி 9, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)
