» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தடுப்பணையில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி

செவ்வாய் 3, ஜூன் 2025 12:20:08 PM (IST)

குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த "இரண்டு மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த பீட்டர் ஜான்சன் என்பவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, ரூ.10 இலட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது - கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை நகரத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான்சன் என்பவர் குழித்துறை தடுப்பணை மேல்பகுதியில் வாவுபலி திடல் அருகில் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டில் நின்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இவர் 01.06.2025 அன்று சுமார் காலை 11.30 மணியளவில் மேற்படி பகுதியில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் வெட்டுமணி பகுதியிலிருந்து குழித்துறை, மதிலகம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ (வயது 17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (வயது 12) ஆகிய இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்ட பீட்டர் ஜான்சன் இரண்டு மாணவர்களையும் காப்பாற்ற தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் இறங்கி காப்பாற்றி கரை ஏற்றிவிட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில் இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாணவர்களையும் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்துள்ள பீட்டர் ஜான்சன் அவர்களின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு ஓர் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் பீட்டர் ஜான்சன் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு 

பீட்டர் ஜான்சன் அவர்களின் துணிச்சல் மற்றும் அவரது தியாக உணர்வைப் போற்றும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சத்தினை உடனடியாக வழங்கிட ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory