» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விவேக் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக மாறியது : நெல்லை, மதுரை வழியாக இயக்க கோரிக்கை!
சனி 13, ஜூலை 2024 12:23:12 PM (IST)

குமரி- திப்ருகர் இடையே செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக மாறிய நிலையில், இந்த திப்ருகர் ரயிலை நெல்லை, மதுரை வழியாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் என்ற இடத்துக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நாட்டிலேயே அதிக தூரம் அதாவது 4,273 கிலோ மீட்டர் தூரம் இயக்கப்படும் ரயில் ஆகும். முதலில் கொச்சுவேலியில் இருந்து எர்ணாகுளம் வழியாக திப்ருகருக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டது. பின்னர் கொச்சுவேலியில் இருந்தே நிரந்தர ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கொச்சுவேலியில் இடநெருக்கடி ஏற்படும் என்ற காரணத்தால் இந்த ரயிலை கன்னியாகுமரியில் இருந்து இயக்கினர். இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு முதல் விவேக் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு முதல் விவேக் ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தினசரி ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வேத் துறை அறிவித்தது.
அதன்படி தினசரி ரயிலாக விவேக் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் தனது முதல் சேவையை தொடங்குவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நாகர்கோவில் யார்டில் பராமரிப்பு பணிக்காக வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி தடம்புரண்டது. பின்னர் தடம்புரண்ட பெட்டி மீட்கப்பட்டு கன்னியாகுமரியில் இருந்து நேற்று அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயில் வழக்கமாக கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் கேரளா வழியாக செல்வதால் குமரி மாவட்ட மக்களுக்கு இந்த ரயிலால் எந்த பயனும் இல்லை. இதனால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் திப்ருகர் ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வருகிறார்கள். எனவே தினசரி ரயிலாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் திப்ருகர் ரயிலை நெல்லை, மதுரை வழியாக இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு முன்னதாக இந்த ரயில் புறப்படுகிறது. ஆனால் கேரளா வழியாக செல்வதால் வெறும் ரயில் தான் திருவனந்தபுரத்துக்கு செல்கிறது. அதுவே தமிழகம் வழியாக இயக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும். எனவே திப்ருகர் ரயிலை மதுரை வழியாக இயக்க வேண்டும் என்பது பயணிகள் மற்றும் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது.
மக்கள் கருத்து
A.sekarJul 14, 2024 - 03:50:35 PM | Posted IP 172.7*****
c0tinue the work route change tamilnadu good opportunity
சத்தியராஜ் Sathyaraj.mJul 14, 2024 - 01:37:20 PM | Posted IP 162.1*****
தமிழக மக்களுக்கு வசதியாக அதிக அளவிலான பயணிகளுக்கான உதவியாக இருக்க வாய்ப்பாக அமையும்
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

ChockalingamJul 17, 2024 - 12:07:08 PM | Posted IP 162.1*****