» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது

செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில், மிகுந்த அரிதான மற்றும் அதிக விலை மதிப்புடைய போதைப்பொருள் வகையான மெத்தம் பேட்டமைன் (Methamphetamine) வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் தகவலின்படி, திருவனந்தபுரம் நலஞ்சரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகண்ணன் என்பவரின் மகன் நிதின் (33) மற்றும் திருவனந்தபுரம் இலவுகோடு பகுதியைச் சேர்ந்த குட்டப்பன் என்பவரின் மகன் அனீஸ் (35) ஆகிய இருவரும் விற்பனைக்காக  11 கிராம் அளவிலான மெத்தம் பேட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த கைது நடவடிக்கை மாவட்டத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு பணிகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் கூறியதாவது:  "போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக குண்டர் சட்டம் உள்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இளைஞர்கள் எதிர்காலத்தை கெடுக்கும் போதைப்பொருள் வலையமைப்பை முழுமையாக தகர்க்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்,” என்றார்.





மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory