» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)
குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில், மிகுந்த அரிதான மற்றும் அதிக விலை மதிப்புடைய போதைப்பொருள் வகையான மெத்தம் பேட்டமைன் (Methamphetamine) வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் தகவலின்படி, திருவனந்தபுரம் நலஞ்சரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகண்ணன் என்பவரின் மகன் நிதின் (33) மற்றும் திருவனந்தபுரம் இலவுகோடு பகுதியைச் சேர்ந்த குட்டப்பன் என்பவரின் மகன் அனீஸ் (35) ஆகிய இருவரும் விற்பனைக்காக 11 கிராம் அளவிலான மெத்தம் பேட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த கைது நடவடிக்கை மாவட்டத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு பணிகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் கூறியதாவது: "போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக குண்டர் சட்டம் உள்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இளைஞர்கள் எதிர்காலத்தை கெடுக்கும் போதைப்பொருள் வலையமைப்பை முழுமையாக தகர்க்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்,” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை கண்டித்து நாகர்கோவிலில் திமுக ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:37:05 PM (IST)

சாலையில் கிடந்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது..!
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:30:51 PM (IST)

குமரி மாவட்டத்தில் 91.74 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கல் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 11, நவம்பர் 2025 11:02:22 AM (IST)

உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)

குமரியில் கொட்டி தீர்த்த மழையால் பயிர் நடவு பணி தீவிரம் : விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 8, நவம்பர் 2025 11:49:34 AM (IST)

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)


.gif)