» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாலையில் கிடந்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது..!
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:30:51 PM (IST)

ஆசாரிப்பள்ளம் பகுதியில் சாலையில் கிடந்த மணி பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் டெரிக் சந்திப்பு செல்லும் சாலை இடையே உள்ள வழியில் யாரோ நபர் தவறவிட்ட மணிபர்ஸ் கிடந்துள்ளது இதனை வெள்ளிசந்தை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் என். ராமகிருஷ்ணன் பணிமுடிந்து வீடு திரும்பிய போது கவனித்துள்ளார். உடனடியாக அந்த மணி பர்சை மீட்டு சோதனை செய்ததில் ரூ22,000 மற்றும் ஏ.டி.எம் கார்டு, 2 பேன் கார்டு, ஆர்சி புக்,ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் ஆகியவை இருந்துள்ளது.
உடனே பர்ஸில் இருந்த ஓட்டுநர் லைசன்ஸ் முகவரி நபரை தொடர்பு கொண்டு,நேரில் அழைத்து தவறவிட்ட மணிபர்ஸை வழங்கினார். மணி பர்ஸை தவறவிட்ட நபர் மற்றும் அவரது தாய் போலீசிடம் மணிபர்ஸை பெற்று கொண்டு நன்றி தெரிவித்து சென்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் உதவி ஆய்வாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)


