» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாலையில் கிடந்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது..!
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:30:51 PM (IST)

ஆசாரிப்பள்ளம் பகுதியில் சாலையில் கிடந்த மணி பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் டெரிக் சந்திப்பு செல்லும் சாலை இடையே உள்ள வழியில் யாரோ நபர் தவறவிட்ட மணிபர்ஸ் கிடந்துள்ளது இதனை வெள்ளிசந்தை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் என். ராமகிருஷ்ணன் பணிமுடிந்து வீடு திரும்பிய போது கவனித்துள்ளார். உடனடியாக அந்த மணி பர்சை மீட்டு சோதனை செய்ததில் ரூ22,000 மற்றும் ஏ.டி.எம் கார்டு, 2 பேன் கார்டு, ஆர்சி புக்,ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் ஆகியவை இருந்துள்ளது.
உடனே பர்ஸில் இருந்த ஓட்டுநர் லைசன்ஸ் முகவரி நபரை தொடர்பு கொண்டு,நேரில் அழைத்து தவறவிட்ட மணிபர்ஸை வழங்கினார். மணி பர்ஸை தவறவிட்ட நபர் மற்றும் அவரது தாய் போலீசிடம் மணிபர்ஸை பெற்று கொண்டு நன்றி தெரிவித்து சென்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் உதவி ஆய்வாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புதிய பெட்டிகளுடன் முதல் பயணத்தை துவங்கியது
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:03:13 PM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)


.gif)