» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடலில் படகு இரண்டாக உடைந்து விபத்து: மீனவர் தப்பினார் - மற்றொருவர் மாயம்!
திங்கள் 17, நவம்பர் 2025 4:25:54 PM (IST)
முட்டம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகு இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் நீந்தி தப்பினார். மேலும் ஒருவர் கடலில் மாயமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் – குளச்சல் சட்டமன்ற தொகுதியில் உள்ள முட்டம் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயரின் மகன் சுமன் ( 32 வயது) மற்றும் சத்தியான் மகன் ரகு ஆகிய இரு மீனவர்கள் கொல்லத்தில் மீன்பிடி தொழில் முடித்து முட்டம் நோக்கி கடற்கரை வழியாக வந்தபோது திடீர் அலைக்காற்றில் வள்ளம் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது.
இதில் ரகு நீந்தி நீரோடி பகுதியில் கரை சேர்ந்தார். ஆனால் சுமன் இதுவரை கரை திரும்பவில்லை. அவரை மீட்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், கடலோர காவல்துறை, மீன்வளத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சஹகார் பாரதி தலைவரும் முன்னாள் கூட்டுறவு இணைய தலைவருமான இ.எஸ். சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் இதுவரை 2,64,716 எஸ்ஐஆர் படிவங்கள் பதிவு: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, நவம்பர் 2025 12:23:04 PM (IST)

ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை எட்டி உதைத்த போதை ஆசாமி கைது!
திங்கள் 17, நவம்பர் 2025 8:47:52 AM (IST)

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்!
சனி 15, நவம்பர் 2025 4:48:55 PM (IST)

பரோடா கிசான் பக்வாடா நிகழ்ச்சியில் ரூ.1 கோடி கடனுதவி : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
வெள்ளி 14, நவம்பர் 2025 10:24:39 AM (IST)

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: விஜய்வசந்த் எம்.பி கடும் கண்டனம்!
புதன் 12, நவம்பர் 2025 12:53:06 PM (IST)

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)


.gif)