» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடலில் படகு இரண்டாக உடைந்து விபத்து: மீனவர் தப்பினார் - மற்றொருவர் மாயம்!

திங்கள் 17, நவம்பர் 2025 4:25:54 PM (IST)

முட்டம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகு இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் நீந்தி தப்பினார். மேலும் ஒருவர் கடலில் மாயமானார். 

கன்னியாகுமரி மாவட்டம் – குளச்சல் சட்டமன்ற தொகுதியில் உள்ள முட்டம் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயரின் மகன் சுமன் ( 32 வயது) மற்றும் சத்தியான் மகன் ரகு ஆகிய இரு மீனவர்கள் கொல்லத்தில் மீன்பிடி தொழில் முடித்து முட்டம் நோக்கி கடற்கரை வழியாக வந்தபோது திடீர் அலைக்காற்றில் வள்ளம் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது.

இதில் ரகு நீந்தி நீரோடி பகுதியில் கரை சேர்ந்தார். ஆனால் சுமன் இதுவரை கரை திரும்பவில்லை. அவரை மீட்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், கடலோர காவல்துறை, மீன்வளத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சஹகார் பாரதி தலைவரும் முன்னாள் கூட்டுறவு இணைய தலைவருமான இ.எஸ். சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory