» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
ஞாயிறு 19, மே 2024 9:26:31 PM (IST)
கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.

கிர்கிஸ்தான் நாட்டில் ஏராளமான இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலின் எதிரொலியாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் பரவின. கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து விசாரித்தேன்.
இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், அவர்களின் நலன் உறுதி செய்யப்படும் என தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து மாணவர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)
