» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
ஞாயிறு 19, மே 2024 9:26:31 PM (IST)
கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலில் இந்திய மாணவர்கள், குறிப்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.கிர்கிஸ்தான் நாட்டில் ஏராளமான இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலின் எதிரொலியாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் பரவின. கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து விசாரித்தேன்.
இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், அவர்களின் நலன் உறுதி செய்யப்படும் என தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து மாணவர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம்: நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 10:40:07 AM (IST)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்: 156 வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:28:21 PM (IST)

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம்: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:14:46 PM (IST)

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)



.gif)