» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரதமர் மோடியால் இந்தியாவிற்கே தலைகுனிவு : அமைச்சர் மனோ தங்கராஜ்

வெள்ளி 12, ஏப்ரல் 2024 10:13:24 AM (IST)

பிரதமர் மோடியின் பிரசாரம் சாதியை முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு, முழுக்க முழுக்க மதத்தையம், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது.குறிப்பாக 06/04/2024 அன்று, உத்திர பிரதேசத்தில் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை போல இருப்பதாக பேசினார்.

08/04/2024 அன்று, பீகாரில் பேசுகையில், காங்கிரஸ் கட்சி ராமரை இழிவுபடுத்தியதாகக் கூறினார்.09/04/2024 அன்று, உத்திர பிரதேசத்தில் பேசுகையில், நவராத்ரி முதல் நாளன்று தேவியை வணங்குபவர்கள் காங்கிரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், நல்ல சாதியை சார்ந்த ஒருவர் தங்கள் கட்சி தலைவராக இருப்பதாகக் கூறி, பிற சமூக மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தினார்

இவை அனைத்தும் வன்மையான கண்டனத்திற்குரிய பேச்சு. இப்பேர்பட்ட ஒருவர் இந்திய நாட்டின் பிரதமர் என்று சொல்வது இந்தியாவிற்கே தலைகுனிவு. என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

IndianApr 12, 2024 - 12:59:44 PM | Posted IP 162.1*****

How are you?

மக்கள்Apr 12, 2024 - 10:55:04 AM | Posted IP 172.7*****

சாராய ஆட்சி திமுகவால் தமிழகத்தில் தலைக்குனிவு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory