» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புதுக்கடையில் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி!.

திங்கள் 8, ஏப்ரல் 2024 4:22:00 PM (IST)

புதுக்கடையில் ஆற்றில் குளிக்க சென்றவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

குமரி மாவட்டம், புதுக்கடை அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவன் (53). இவர் கூலித் தொழிலாளி. நேற்று மாலை சிவன் மங்காடு ஆற்றில் குளிக்க சென்றார். படித்துறையில் இறங்கும் நேரத்தில் எதிர்பாராமல் கால் தடுக்கி ஆற்றில் விழுந்தார். ஆனால் அவர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

இதை பார்த்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவரை உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சிவன் மனைவி சுபா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory