» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண்ணை கட்டிப்போட்டு 20 பவுன் நகைகள் கொள்ளை: போலீஸ் விசாரணை!

வியாழன் 4, ஏப்ரல் 2024 11:11:17 AM (IST)

கொல்லங்கோடு அருகே வீடுபுகுந்து, பெண்ணை கட்டிப் போட்டு 20 பவுன் நகைகளை கொள்ளையடித்த மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம்,கொல்லங்கோடு அருகே சூழால், புலயகோணம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி கீதா (56). இவா், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த இருவா், செண்பகராமன்புதூா் பகுதியிலிருந்து திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக கூறியுள்ளனா். இதையடுத்து கீதா வீட்டுக் கதவை திறந்ததும், மா்ம நபா்கள் இருவரும் கீதாவை வலுக்கட்டாயமாக பிடித்து அவரது கைகளை கட்டிப்போட்டு, அவரது வாயில் பிளாஸ்டரை ஒட்டினராம். 

தொடா்ந்து வீட்டு அலமாரியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். அதன் பின்னா் கீதாவின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி உறவினா்கள் அங்கு வந்துள்ளனா். இதைத் தொடா்ந்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory