» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெங்களூரு-நாகர்கோவில் ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்: ரயில்வே அறிவிப்பு!

வியாழன் 8, பிப்ரவரி 2024 8:29:01 AM (IST)

இரட்டை பாதை பணி காரணமாக பெங்களூரு-நாகர்கோவில் ரயில் 6 நாட்கள் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி-மேலப்பாளையம் இடையே தெற்கு ரயில்வே இரட்டை பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதால் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 17235) வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயங்கும்.

நாகர்கோவில்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (17236) வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

தாதர்-திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (11021) வருகிற 17-ந்தேதி விருதுநகர்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருநெல்வேலி-தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (11022) வருகிற 19-ந்தேதி திருநெல்வேலி-விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அன்றைய தினம் விருதுநகரில் இருந்து புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory