» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடல் நடுவில் ஏற்றப்பட்ட ராமர் கொடி அகற்றம் : கன்னியாகுமரியில் பரபரப்பு
புதன் 7, பிப்ரவரி 2024 7:57:18 PM (IST)
கன்னியாகுமரியில் கடல் நடுவில் பாறையில் ஏற்றப்பட்ட காவிக்கொடி அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர்கொடி குறித்து சமூக வலைத் தளங்களில் புகைப்படம் வெளியான நிலையில் நேற்று இரவோடு இரவாக கடலில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர் கொடி அகற்றப்பட்டது. அதையும் மீறி அந்த பகுதியில் மீண்டும் காவி கொடியேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் அந்த காவி கொடி அகற்றப்பட்டது. இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்