» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாசரேத் நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
செவ்வாய் 6, பிப்ரவரி 2024 11:59:35 AM (IST)
நாசரேத் நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி கிழக்கு மண்டலம், நாசரேத் நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வகுத்தான்குப்பம் மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில் நகர தலைவர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்றது. ஆழ்வார் திருநகரி கிழக்கு மண்டல தலைவர் குமரேசன், மண்டல பொது செயலாளர் முருகன் என்ற பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், மகேந்திரன், கே.எஸ்.முருகன், மண்டல துணைத்தலைவர் பால் வண்ணன், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மண் டல தலைவர் முருகன், ஆன்மீகம் கோவில் மேம்பாட்டு பிரிவு மண்டல தலைவர் ரவிசந்திரன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மண்டல செயலாளர் கள் கார்த்திசன், கண்ணன், செய்தி மற்றும் ஊடக பிரிவு மண்டல செயலாளர் ராமலி ங்கம், மத்திய அரசு நலதிட்ட பிரிவு மண்டல துணை தலைவர் சின்னத்துரை, பலர் கலந்து கொண்டனர்.