» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
செவ்வாய் 6, பிப்ரவரி 2024 11:55:26 AM (IST)
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மூலமாக குருப்-4 தேர்விற்கான இலவச பயிற்சி பகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குருப்-4 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு 30.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மூலமாக நேரடியாக அலுவலகத்தில் வைத்து நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08.02.2024 வியாழக்கிழமை முதல் காலை 10 மணி துவங்கி மதியம் 1 மணி வரை, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக வேலைநாட்களில் நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து தன்னார்வ பயிலும் வட்ட உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 04652-261191 என்ற தொலைபேசி எண்ணிற்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.