» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஞாயிறு 4, பிப்ரவரி 2024 11:58:11 AM (IST)

பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் கோவை - சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரியிலிருந்து இன்று (4-ந்தேதி) இரவு 8.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06041) நாளை காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (5-ந்தேதி) மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06042) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இதேபோல, கோவையிலிருந்து இன்று (4-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06043) மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (5-ந்தேதி) காலை 10.20 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06044) அதேநாள் இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory